கோவையில் புதிய கிளையை துவக்கியது ஏபிசி கிளினிக் - பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே துவக்கி வைத்தார்.


ஆண், பெண் என இருபாலருக்கும் அழகுபடுத்திக் கொள்ளும் சிகிச்சை அளிக்கும் அதிநவீன கிளினிக்கின் எட்டாவது கிளையாக கோயம்புத்துாரில் துவக்கப்பட்டுள்ளது. இதனை பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 



அடுத்த 15-18 மாதங்களில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 50 கிளினிக்குகளை துவக்க வேண்டும் என்ற விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கு துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஏபிசி கிளினிக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திருமல் ராஜ், கூறுகையில்; “சென்னையில் மற்றுமொரு கிளையோடு, கோவையில் 8வது கிளையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பெங்களுரு, ஐதராபாத், மற்றும் புனே உள்ளிட்ட மேலும் 15 இடங்களில் துவக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். இவை அனைத்தும் அடுத்தடுத்த மாதங்களில் துவக்க உள்ளோம். இந்தியா முழுவதும் அழகு சிகிச்சைக்கு நல்ல தேவைகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரிலும் சர்வதேச தரம் வாய்ந்த சேவையை எளிதாக கிடைக்கச் செய்வோம்.



ஏபிசி கிளினிக் துவக்கப்பட்ட 2015ம் ஆண்டிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களை கிளினிக்குகளில் அறிமுகம் செய்து வருகிறது. இதன் முக்கிய அம்சமே அதிநவீன அடிப்படை கட்டமைப்பு வசதியில், பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சையாளர்கள் தான். இந்தியாவில் துவக்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே வேகமான விற்பனையை பெற்றது. ஏபிசி கிளினிக் பெங்களுரு, புனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் வணிக வாய்ப்புகளை துவக்கியுள்ளது. பிற நகரங்களிலும் இந்த வாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது.

அழகு பெற அறுவை சிகிச்சை பெறும் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவியும் அளிக்க வங்கி சாரா நிதி நிறுவனங்களுடனும் ஏபிசி கிளினிக் பங்குதாராக உள்ளது. பங்குதாரர்களுக்கு தொடர்ந்து அதிநவீன பயிற்சிகளை ஏபிசி கிளினிக் சர்வதேச அளவிலான அழகுதுறை டாக்டர்களைக் கொண்டு  அளித்து வருகிறது என்கிறார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...