வனத்துறையினரின் மெத்தனப் போக்கால் உயிரிழப்பு - எஸ்.பி. வேலுமணி கண்டனம்

கோவை தொண்டாமுத்தூர் விரலியூர் பகுதியில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையின் அலட்சியம் குறித்து எஸ்.பி. வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர், உடனடி நடவடிக்கை கோரியுள்ளார்.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் விரலியூர் பகுதியில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

எஸ்.பி. வேலுமணி கூறுகையில், "தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் அடிக்கடி வருவதால் பயிருக்கும் பாதுகாப்பில்லை, உயிருக்கும் பாதுகாப்பில்லை. நேற்று இரவு விரலியூர் பகுதியில் யானை பூசாரி ஒருவரை தாக்கியுள்ளது. யானையை விரட்டும் முயற்சியில் இருவர் காயமடைந்ததில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். காலையில் யானை மேலும் மூவரை தாக்கியுள்ளது," என்றார்.



"வனத்துறையினர் இரவே யானையை விரட்டி இருந்தால் காலையில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்காது. வனத்துறையினர் பெயரளவுக்கு செயல்படுகிறார்களே தவிர முறையான நடவடிக்கை எடுப்பதில்லை, அதற்காக நிதியும் ஒதுக்கப்படுவதில்லை," என்று அவர் குற்றம் சாட்டினார்.

வேலுமணி மேலும் கூறுகையில், "இன்றைக்கு ஒரு உயிர் போய்விட்டது, ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களுக்கு கை கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது. தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வருகிறோம்," என்றார்.



அகழி வெட்டினாலும் மின்வேலி அமைத்தாலும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் யானைகள் மீண்டும் வர ஆரம்பித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார். விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், பயிர் சேதம் ஏற்படும் போது போதுமான நிவாரணம் அளிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

"யானை தொடர்ந்து அங்கேயே இருக்கின்றது. வனத்துறையினர் அங்கேயே இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை அந்த இடத்திற்கு பழகிவிட்டது எனவே உடனடியாக அந்த யானையை இங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்," என்று வேலுமணி வலியுறுத்தினார்.

வனத்துறையினரின் மெத்தனப் போக்கை கைவிட்டு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...