கோவை கவுண்டம்பாளையத்தில் நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்த 50 வயது நீதிமன்ற ஊழியர் சந்திரசேகர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம் தெரியவில்லை.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (50) என்பவர் கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூலை 28) அவரது மனைவி பூங்கொடி, மகள் மற்றும் மகனுடன் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக சந்திரசேகரின் மனைவி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகரின் மனைவியும் குழந்தைகளும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...