கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபரை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.


கோவை: கோவை பீளமேட்டில் அரிசி ஆலை அதிபர் ஜாபர் சாதிக்கை கடத்தி தாக்கி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தேடப்படுகின்றனர்.

கோவை உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்த ஜாபர் சாதிக் (35) பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

ஜூலை 28 அன்று, ஒருவர் ஜாபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்தார். வீட்டு முன்பு நின்றிருந்த இருவர் அரிசி கடத்தல் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினர். அப்போது மேலும் 5 பேர் காரில் வந்து, ஜாபர் சாதிக்கை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

பாலக்காடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் காரை நிறுத்தி, ஜாபர் சாதிக்கை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 23,000 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டனர். அரிசி கடத்தல் சம்பந்தமாக வெளியே சொன்னால் தொலைத்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து ஜாபர் சாதிக் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (37), கோவைப்புதூரை சேர்ந்த தவ்பிக் (39), கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமத் அசாருதீன் (35) ஆகிய மூவரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜியா, ஜாகீர், அன்வர், அஜீஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...