அக்டோபர் முதல் கோவை-சிங்கப்பூர் இடையே புதிய விமான சேவை: இண்டிகோ நிறுவனத்திற்கு அனுமதி

கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனம் புதிய விமான சேவையை அக்டோபர் முதல் தொடங்குகிறது. இதன் மூலம் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை நான்காக உயருகிறது.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை அக்டோபர் முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்திற்கு இந்த சேவையை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், ஆகஸ்ட் 10 அன்று கோவை-அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, கோவை-சிங்கப்பூர் இடையிலான புதிய விமான சேவை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதன்படி, ஸ்கூட் விமான நிறுவனமும் கோவை-சிங்கப்பூர் இடையே சேவை வழங்க உள்ளது. இந்த சேவை வாரம் முழுவதும் இயக்கப்படும். சிங்கப்பூரில் இருந்து இரவு 10 மணிக்கு கோவை வந்து, 10:45 மணிக்கு சிங்கப்பூருக்கு திரும்பும்.

இந்த புதிய சேவைகளுடன், கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. சமீபத்தில், அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவை-சிங்கப்பூர் விமான சேவை தொடங்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த அறிவிப்பு கோவை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சேவைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...