கோவையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் கைது- தாயுடன் சிறை சென்ற குழந்தைகள் !

கோவையில் இரு வேறு இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்கள் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை ஒரு சிலர் தொழிலாகவே செய்து வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களிடம் இருந்து அவ்வப்போது சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு ஒரு வயது குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா என்ற பெண்ணை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ரத்தினபுரி, முத்துகுமரன் நகர் பள்ளிவாசல் அருகே மாதவி (9) மற்றும் தமிழரசி (2) ஆகிய இரு குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கவைத்த மாரியம்மாள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைபட்ட சின்னஞ்சிறு குழந்தைகள்:-

முன்னதாக, கோவையில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா மற்றும் மாரியம்மாளின் குழந்தைகளுக்கு ஒன்று மற்றும் இரண்டு வயதே நிறைவடைந்துள்ளதால் தாயுடனேயே அக்குழந்தைகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாரியம்மாளின் மற்றுமொரு 9 வயது குழந்தை மட்டும் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...