கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு

கோவை - பகத் கி கோத்தி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக கோவை - பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்.06181 கோயம்புத்தூர் - பகத் கி கோத்தி வாராந்திர சிறப்பு ரயில் (வியாழக்கிழமைகளில்) ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை (9 சேவைகள்) இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 2.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை பகத் கி கோதி-யை காலை 11.30 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண்.06182 பகத் கி கோதி - கோவை சிறப்பு ரயில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு பகத் கி கோதியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயிலில் ஏசி 3-அடுக்கு, ஏசி 3-அடுக்கு எகானமி, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள் இருக்கும்.

ரயில் நின்று செல்லும் இடங்கள்: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யர்ரகுன்ட்லா, கூடி, தோன், கர்னூல் சிட்டி, மஹ்பூப் நகர், கச்சேகுடா, காமரெட்டி, நிஜாமாபாத், முட்கேட், நந்தேட், பூர்ணா, ஹிங்கோலிம், டெக்கான், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், ஜலோர், மொகல்சர் மற்றும் சம்தாரி.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...