மடத்துக்குளம் அருகே மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அவதி: அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திட்டமிடல் குறைபாடு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அடிப்படை வசதிகள் இன்மையும், போக்குவரத்து நெரிசலும் மக்களை அவதிக்குள்ளாக்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தூங்காவி ஊராட்சியில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வில் மடத்துக்குளம் வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரின் சரியான திட்டமிடல் இல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபம் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், துங்காவியில் இருந்து கோட்டமங்கலம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்வுக்கு வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், விபரம் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணன், பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கு டோக்கன் வழங்கினார். மேலும், உடுமலை பகுதியில் இருந்து தேவையான கூடுதல் இ-சேவை மையங்களை துங்காவி கிராமத்திற்குக் கொண்டு வந்தார்.



இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை கோரி அதிக அளவிலான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். ஆனால், அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியமான துறை அதிகாரிகள் வராததால் பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...