உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்த பசுமை தேசம்


இன்று உலக புவி தினத்தினை முன்னிட்டு கோவை பசுமை தேசம் சார்பில் மரக்கன்று நடும் விழா கொண்டாட்டப்பட்டது.



கோவையில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் சுமார் 6 அடி உயரமுள்ள இரண்டு வேப்பமரங்கள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்ற பசுமைதேசம் நிறுவனர் ராஜேந்தர் கூறுகையில், உலக புவி தினத்தை முன்னிட்டு புவியினையும், உயிரினங்களையும் பாதுகாத்திடும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



அதன்படி, இவ்வான்று மதுக்கரை சாலை, சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் தினமலர் பத்திரிகை அலுவலகம் முன்பு இரண்டு வேப்ப மரக்கன்று நடப்பட்டது. இவை 6 அடி உயரம் கொண்டவை. ஏனெனில், வெயில் காலத்தில் சிறியளவிலான மரக்கன்றுகளை நட்டினால் அவை போதிய நீரின்மையாலும், வெப்பத்தினாலும் வாடிவிடும். எனவே தான் வளச்சியடைந்த வேப்பமரக் கன்று நடப்பட்டுள்ளது" என்றார்.



இந்நிகழ்வின் போது, பசுமை தேசம் உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...