வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு கோவையிலிருந்து டெல்டா குவாட் குழு புறப்பட்டது

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 25 பேர் கொண்ட டெல்டா குவாட் குழு, நவீன மீட்பு உபகரணங்களுடன் வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டது. இந்த குழு 18 பேரிடர்களில் 3,500க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இயங்கி வரும் டெல்டா குவாட் குழு, வயநாடு நிலச்சரிவு பாதிப்பு பகுதிக்கு நவீன மீட்பு உபகரணங்களுடன் புறப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா குவாட் குழுவில் 25 வீரர்கள் உள்ளனர். கமாண்டர் ஈசன் தலைமையிலான இந்த குழு, கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டுள்ளது.



வயநாடு, சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் மண்ணில் புதைந்திருப்பவர்களை துல்லியமாக கண்டறியும் சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவியை இந்த குழு எடுத்துச் செல்கிறது. சேட்டிலைட் சிக்னல் மூலம் இயங்கும் இந்த கருவி மூலம் மண்ணில் புதைந்திருப்பவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும்.

மேலும், ரப்பர் படகுகள், ரப்பர் டியூப்கள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.

இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள இந்த டெல்டா குவாட் குழு, 3,500க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...