இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு கோவையில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி

உலகம் முழுவதும் ஏப்ரல் 22ம் தேதியன்று (இன்று) உலக புவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக புவி தினத்தை முன்னிட்டு புவியின் மகிமையினை போற்றும் வகையில் உலகம் முழுவதும் 500 இடங்களில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கோவையிலேயே மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி நடைபெற்றது.



கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இப்பேரணியினை ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் மற்றும் ராக் அமைப்பு இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பங்கேற்று பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் சாரதா கூறுகையில், விஞ்ஞானம் மூலமாகவே இவ்வுலகில் பல செயல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞானம் குறித்து பல்வேறு மன நிலைகள் உள்ளது. இதில் தவறான மனநிலைகளை உடனடியாக தவிர்க்க வேண்டும். வரும் காலங்களில் நடக்கவுள்ள தீமைகளை தடுத்து உலகை காக்கும் சக்தி அறிவியல் விஞ்ஞானத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்" என்றார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் என்னைச் சந்தித்து அனுமதி கோரினர். அவர்கள் எனக்கு இதுகுறித்தான முழுத் தகவலையும் தெரிவித்தனர். 



விளையாட்டு, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு என்று மாணவர்கள் தங்களது சுயநலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இச்சமுதாயத்தில் இந்த மாணவர்கள் சமூகநல அக்கறையுடன் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. அதனாலேயே உடனடியாக அனுமதியளித்தேன். 



இன்று மட்டும் இன்றி ஒவ்வொரு நாளும் நாம் புவி தினத்தை கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த உலகை அழகான முறையில் விட்டுச் செல்ல வேண்டும். இவ்வுலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அவற்றை ஆக்கப்பூர்வமாகவும், அழிவுப்பூர்வமாகவும் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணியில் கல்லூரி முதல் சிறுவயதுடைய ஆரம்பப் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று புவியினை போற்றும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர். 

ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இப்பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதிக்குட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...