பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றக் கூட்டத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி பேசிய போது, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் "என்ன ஜாதி" என ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் செயலை வன்மையாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...