கோவையில் கட்டுவிரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

கோவையில் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் 35 வயது பாம்பு பிடி வீரர் முரளிதரன் உயிரிழந்தார். சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களிலேயே உயிரிழப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்த 35 வயது பாம்பு பிடி வீரர் முரளிதரன், காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் பாம்பு புகுந்ததாக வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்றபோது, கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.

முரளிதரனுக்கு மனைவி, பள்ளி படிக்கும் ஒரு மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர். நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் பாம்பு புகுந்ததாக தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்ற முரளிதரன், மேஜை அடியில் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பைக் கண்டார்.



பாம்பை லாவகமாக வாலைப் பிடித்து தூக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அது அவரைக் கடித்தது. பாம்பை பைக்குள் பிடித்து தூக்கிச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், வனத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



முரளிதரன் பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றினார்.



எனினும், பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறை மற்றும் துடியலூர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...