கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி: ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது

கோவை TNAU-வில் ஆகஸ்ட் 5, 2024 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.590. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சி, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமாக ரூ.590-ஐ நேரடியாக செலுத்த வேண்டும். பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0422-6611336, 0422-6611226. மின்னஞ்சல்: [email protected].

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...