கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற மரநடுகை விழாவும் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மண்டல அறிவியல் மையம் சார்பில், அறிவியல் ஒளி அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும், மரநடுகை விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பேராசிரியர் முனைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அறிவியல் அலுவலர் சுடலை வரவேற்றார்.
அறிவியல் ஒளி மாத இதழின் ஆசிரியர் சிதம்பரம் வாழ்த்துரை வழங்கினார். அறிவியல் எழுத்தாளரும், அறிவியல் விழிப்புணர்வு பணிக்காக தேசிய விருது பெற்றவருமான பேராசிரியர் மோகன் சுந்தரராஜன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பேராசிரியர் முனைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அறிவியல் அலுவலர் சுடலை வரவேற்றார்.
அறிவியல் ஒளி மாத இதழின் ஆசிரியர் சிதம்பரம் வாழ்த்துரை வழங்கினார். அறிவியல் எழுத்தாளரும், அறிவியல் விழிப்புணர்வு பணிக்காக தேசிய விருது பெற்றவருமான பேராசிரியர் மோகன் சுந்தரராஜன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.