KMCH கல்லீரல் தொடர் பயிற்சி – 3 வைரஸ் ஹெப்பாடிட்டீஸ்… எளிதாக்குவோம்

KMCH கல்லீரல் மையத்தில் உள்ள மருத்துவர்கள் கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மற்ற பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் பயிலரங்குகள் நடத்துவதிலும் தங்களை நெருக்கமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.



இப்படி ஒரு முயற்சியைதான் ஒரு வருடம் முன்பு KMCH-ல் முன்வைத்து, தொடர்ந்து KMCH கல்லீரல் தொடர் என்னும் திட்டம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என்று KMCH கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பயிற்சி வகுப்பை 22/04/2017 அன்று நடந்தது.

இம் முறை வைரஸ் கிருமியால் எற்படும் ஈரல் நோய்கள் சம்மந்தப்பட்ட கருத்தரங்கம் நடைபெற்றது . இந்தியாவில் ஏறக்குறைய  5 கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ், டிபி,மலேரியா போன்ற நோய்களை விடஅதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த முக்கியமான செய்தி பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் .இந்த விழிப்புணர்வை எற்படுத்த இந்த கருத்தரங்கம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என டாக்டர் . விவேகானந்தன் தலைவர் - KMCH கல்லீரல் துறை  நம்புகிறார்.இந்த கருத்தரங்கத்தில் பொது மருத்துவர்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களும் ,இரைப்பை மருத்துவ குழுவினரும் கலந்து கொண்டார்கள், இதன் சிறப்பு விருந்தினர்களாக தென் இந்தியாவின் இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

கே.எம்.சி.எச் டைரக்டர் டாக்டர். அருண் பழனிச்சாமி கூறியதாவது. எந்த வைரஸ் கிருமியை நாம் தவிர்க்க முடியும், ஹெப்பாடிட்டீஸ் எ & இ வைரஸ்கள் அசுத்தமான உணவுகளில் இருந்து வருகிறது , மற்றும் ஹெப்பாடிட்டீஸ் பி & சி வைரஸ்கள் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. நம் வாழ்வு முறையில் சுத்தமும் சுகாதாரத்தையும் கடைபிடித்தால்  இக் கொடிய நோய்களில் இருந்து தவிர்க்கலாம். 

இதற்கு தடுப்பூசிகளும் உள்ளது. வரும் முன் காப்போம் என்பதனை மனதில் கொண்டு கே.எம்.சி.எச் பல விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை பல்வேறு இடங்களில் நடத்திவருகிறது.

இந்த கருதரங்கத்தை நடத்தியதற்கு  கே.எம்.சி.எச், டீன் டாக்டர் .V.குமரன் அவர்களும் மற்றும்  கே.எம்.சி.எச்,மருத்துவ இயக்குனர்  டாக்டர்.A.N.முருகன் அவர்களும் கல்லீரல் குழுவை மிக சிறப்பாக பாராட்டி ஊக்குவித்தார்கள்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...