முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதே தங்களது குறிக்கோள் -அமைச்சர் எஸ்.பி வேலுமணி


அ.தி.மு.க இரு அணிகள் தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து திரும்பியவுடன் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

இதனை தொடந்து, கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம், அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்திரிகைகளில் அமைச்சர்கள் பேட்டி அளிப்பதால் குழப்பம் ஏற்படுகின்றது என்பதால், அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் வேலுமணி தெரிவித்தார். 

மேலும், இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் எனவும் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து வந்தவுடன் இரு அணிகள் தரப்பில் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இரு அணிகளும் ஒற்றுமையாக இருந்து செயல்பட இருப்பதாகவும் சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...