கோவை நேரு விளையாட்டு அரங்கில் இரண்டாவது நாளாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. 11 மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஐந்து நாட்களில் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை நேரு விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த முகாம், இரண்டாவது நாளான இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் அக்னி வீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வருகின்றனர். பங்கேற்பாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும் சுமார் 1,000 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மொத்தம் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆள் சேர்ப்பு முகாமை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...