கோவை சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

கோவையில் சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் விஸ்வநாதன் மீது 5 பேர் தாக்குதல் நடத்தினர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மீது 5 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள சின்னக்குப்பம், கோபிநாதன் பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் விஸ்வநாதன் (20) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

விஸ்வநாதனின் தம்பி சபரியை அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சபரி தனது அண்ணன் விஸ்வநாதனிடம் தெரிவித்தார். இதனையடுத்து விஸ்வநாதன், தனது தம்பியை தாக்கிய பழனியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே முன் விரோதம் உருவானது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகில் விஸ்வநாதன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனி உட்பட 5 பேர் விஸ்வநாதனை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் கல்லூரி மாணவரை தாக்கிய பழனி, கௌதம், அன்பு, சர்ஜித், துவாரகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...