கோவை சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

கோவையில் சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் விஸ்வநாதன் மீது 5 பேர் தாக்குதல் நடத்தினர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மீது 5 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள சின்னக்குப்பம், கோபிநாதன் பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் விஸ்வநாதன் (20) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

விஸ்வநாதனின் தம்பி சபரியை அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சபரி தனது அண்ணன் விஸ்வநாதனிடம் தெரிவித்தார். இதனையடுத்து விஸ்வநாதன், தனது தம்பியை தாக்கிய பழனியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே முன் விரோதம் உருவானது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகில் விஸ்வநாதன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனி உட்பட 5 பேர் விஸ்வநாதனை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் கல்லூரி மாணவரை தாக்கிய பழனி, கௌதம், அன்பு, சர்ஜித், துவாரகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...