அந்தகன் திரைப்பட குழுவினர் கோவையில் செய்தியாளர் சந்திப்பு - வயநாடு மக்களுக்கு உதவ பிரசாந்த் வேண்டுகோள்

கோவையில் அந்தகன் திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்தார். திரைப்படம் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகிறது.


Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அந்தகன் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் நடிகர் பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் பிரசாந்த் பேசுகையில், "அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம். அதேசமயம் மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்களும் படத்தில் உள்ளன. விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 09 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது" என்றார்.



மேலும் அவர், "இந்த திரைப்படம் Remake படம் இல்லை, Remade படம். 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது. மேலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த், "கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது" என்றார்.



இறுதியாக, "வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார் நடிகர் பிரசாந்த்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...