பொள்ளாச்சி மதுபானக் கடையில் இளைஞர் கத்திக்குத்தில் பலி: இரு சந்தேக நபர்கள் கைது

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறில் 22 வயது இளைஞர் கத்திக்குத்தில் உயிரிழந்தார். சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள மதுபானக் கடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கத்திக்குத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22) என்ற இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொள்ளாச்சியில் வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நள்ளிரவு, அரவிந்த் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த விமல் (22) மற்றும் பைசல் (33) ஆகியோருக்கும் அரவிந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. தகராறு கைகலப்பாக மாறியதில், விமல் மற்றும் பைசல் ஆகிய இருவரும் அங்கிருந்த கத்தியால் அரவிந்தைக் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்து சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற விமல் மற்றும் பைசல் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...