கோவை மாவட்ட ஆட்சியர் கணியூர் ஊராட்சிக்கு சர்வதேச தர சான்றிதழ் வழங்கினார்

கோவை மாவட்டத்தில் சூலூர் ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி சிறந்த செயல்பாட்டிற்காக ISO சான்றிதழ் பெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த சான்றிதழை ஊராட்சி தலைவரிடம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (05.08.2024) ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அடிப்படை தேவைகளை சிறப்பாக கையாளும் உள்ளாட்சி அமைப்புகளில், சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி மாநில அளவில் 4-வது ஊராட்சியாகவும், மாவட்டத்தில் முதல் ஊராட்சியாகவும் தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக சர்வதேச தரச்சான்று சம்மேளனத்தால் வழங்கப்பட்ட சர்வதேச தர சான்றிதழை (ISO) கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், கணியூர் ஊராட்சி துணைத் தலைவர் ராஜு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜு, ஹேமலதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கள சக்தியா, ஊராட்சி செயலர் ஜெகதீசன் மற்றும் பல பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....