உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.3.28 லட்சம் வசூல்

உடுமலை அருகே திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.3,28,403 வசூலானது. கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.



இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் வருகை தருகின்றனர்.



கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் 12 பொது உண்டியல்களில் இருந்து ரூபாய் நோட்டுகள் ரூ.2,99,360 மற்றும் நாணயங்கள் ரூ.27,621 ஆக மொத்தம் ரூ.3,26,981 வசூலானது. கோசாலை உண்டியலில் இருந்து ரூ.1,422 வசூலானது. ஆக மொத்தம் அனைத்து உண்டியல்களிலும் சேர்த்து ரூ.3,28,403 வசூலானது.



இந்த உண்டியல் எண்ணிக்கை நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, உறுப்பினர்கள் ராஜபாலன், ராதாகிருஷ்ணன், பானுரேகா, தேவராஜ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சரவணக்குமார், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடைசியாக கடந்த ஜூன் 12 அன்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...