உடுமலையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை நடத்தினர்.



பேரணி உடுமலை தளி ரோடு பிரிவில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று ரயில்வே சந்திப்பு பாதையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனியார் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா பேரணிக்கு தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்தியப்பிரியா, எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் நிறுவனர் நெல்சன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...