வாயில் கருப்பு துணி கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோவை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வாயில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில்,

வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராடிவரும் விவசாயிகளையும், தமிழகத்தையும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இன்று நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள், கூட்டமைப்பு சங்கங்களும், நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். 

தேசிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அன்டை மாநிலங்களிலும், தமிழகத்திலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்திலும் புறநகர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இவை சீராக ஒரே வழி மத்திய அரசு தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதே ஆகும்.

காவிரியை சுத்தப்படுத்த 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் அதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது எனவும் தெரியவில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று ஏமாற்றியவருக்கு மூன்று மணி நேரத்தில் ஜாமின் கிடைக்கிறது. சில ஆயிரம் ரூபாய் வங்கிக்கடன் பெற்ற விவசாயிகளின் கழுத்து வங்கி நிர்வாகத்தால் நெரிக்கப்படுகிறது. எனவே, இந்தியா முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தங்களது வாயில் கருப்புத் துணி கட்டி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...