கோவை வேளாண் பல்கலையில் மரபணு குளோனிங் பயிற்சி: இந்தியா, மலேசியா, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் பயிற்சி நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்தியா, மலேசியா, இங்கிலாந்தில் இருந்து 23 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் தாவர உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் நான்கு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 6 முதல் 9, 2024 வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமின் தலைப்பு "மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் மற்றும் மூலக்கூறு பண்புகளின் இயல்பாய்வு ஆகியவற்றில் நேரடி பயிற்சி" என்பதாகும். இந்தியா, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து சுமார் 23 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமின் தொடக்க விழா ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்றது. இதில் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர் N.செந்தில், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தாவர உயிரித் தொழில்நுட்பத் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் இ.கோகிலாதேவி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடக்க உரையில் பேசிய முனைவர் N.செந்தில், அனைத்து மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளுக்கும் ஜீன் குளோனிங் ஒரு முக்கிய நுட்பமாக இருப்பதை வலியுறுத்தினார். மேலும், பயிற்சித் திட்டம் பற்றிய மேலோட்டமான பார்வையையும், மரபணு குளோனிங்கின் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் பேசுகையில், திறமையான மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதில் இந்த வகையான மரபணு குளோனிங் பயிற்சியின் பங்கு குறித்து விளக்கினார். மேலும், மரபணு குளோனிங் மற்றும் ஆராய்ச்சித் துறையில் முன்னேற்றத்திற்கான ஜீனோமிக்ஸ் ஆகியவற்றில் நடைமுறை நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடக்க விழாவில் பங்கேற்பாளர்களின் சுய அறிமுகமும் நடைபெற்றது. நிறைவாக, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் எல்.அருள் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...