கோவை வேளாண் பல்கலையில் மரபணு குளோனிங் பயிற்சி: இந்தியா, மலேசியா, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் பயிற்சி நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்தியா, மலேசியா, இங்கிலாந்தில் இருந்து 23 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் தாவர உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் நான்கு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 6 முதல் 9, 2024 வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமின் தலைப்பு "மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் மற்றும் மூலக்கூறு பண்புகளின் இயல்பாய்வு ஆகியவற்றில் நேரடி பயிற்சி" என்பதாகும். இந்தியா, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து சுமார் 23 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமின் தொடக்க விழா ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்றது. இதில் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர் N.செந்தில், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தாவர உயிரித் தொழில்நுட்பத் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் இ.கோகிலாதேவி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடக்க உரையில் பேசிய முனைவர் N.செந்தில், அனைத்து மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளுக்கும் ஜீன் குளோனிங் ஒரு முக்கிய நுட்பமாக இருப்பதை வலியுறுத்தினார். மேலும், பயிற்சித் திட்டம் பற்றிய மேலோட்டமான பார்வையையும், மரபணு குளோனிங்கின் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் பேசுகையில், திறமையான மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதில் இந்த வகையான மரபணு குளோனிங் பயிற்சியின் பங்கு குறித்து விளக்கினார். மேலும், மரபணு குளோனிங் மற்றும் ஆராய்ச்சித் துறையில் முன்னேற்றத்திற்கான ஜீனோமிக்ஸ் ஆகியவற்றில் நடைமுறை நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடக்க விழாவில் பங்கேற்பாளர்களின் சுய அறிமுகமும் நடைபெற்றது. நிறைவாக, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் எல்.அருள் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...