அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் இடஒதுக்கீட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற உத்திரவு படி தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பிற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதி்ர்ப்பு தெரிவித்தும் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள, பேராசிரியர்கள் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய படி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ரவிசங்கர் கூறுகையில், நீதிமன்றம் மூலமாகவோ, அவசர சட்டம் மூலமாகவோ மீண்டும் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்' என தெரிவித்தார்.

முன்னதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் வெளிநோயாளிகளாக சிகிச்சை எடுக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...