முகநூலில் மத அவதூறு கருத்து: இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது வழக்கு

கோவையில் முகநூலில் மதங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை கண்காணிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகர பகுதியில் முகநூல் பதிவுகளில் அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், சிங்காநல்லூர் காவல் துணை ஆய்வாளர் குறளரசன் முகநூல் கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது, கோவையைச் சேர்ந்த தமிழக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் என்பவர் இரு மதங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பதிவுகள் இரு தரப்பினரிடையே பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என காவல்துறையினர் கருதினர்.

இது தொடர்பாக, சிங்காநல்லூர் காவல் துணை ஆய்வாளர் குறளரசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தமிழக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...