கோவை பீளமேடு, கோவில்பாளையம், சமத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை

கோவை பீளமேடு, கோவில்பாளையம், சமத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 8) பல்வேறு பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மாநகரில் உள்ள மூன்று முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஆகஸ்ட் 8) பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பீளமேடு புதூர், பாரதி காலனி, நஞ்சுண்டாபுரம் ரோடு, சௌரிபாளையம், கணபதி தொழிற்பேட்டை, புலியகுளம், ராமநாதபுரம், ஆவாரம்பாளையம், திருச்சி ரோடு (பகுதி), உடையம்பாளையம், மீனா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம் பாளையம் (கோ இந்தியா பகுதி), வையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கோட்டை பாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், மொன்டகாளிபுதூர் மற்றும் காளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

சமத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆவல்சின்னம்பாளையம், சமத்தூர், பாளையூர், தளவாய்பாளையம், பொன்னாபுரம், நாச்சிபாளையம், பொள்ளாச்சியூர், ஜமின்கொட்டாம்பட்டி, பில்சினாம்பாளையம், வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...