கோவை TNAU-வில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை TNAU-வில் ஆகஸ்ட் 13, 14 தேதிகளில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் ரூ.1,770 கட்டணம் செலுத்த வேண்டும்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, நோனி, தக்காளி மற்றும் பப்பாளி பழங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் நோனி பிளைன், குவாஷ், ஊறுகாய், ஜாம், தக்காளி சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளி ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி ஆகியவற்றை தயாரிக்க கற்றுக் கொடுக்கப்படும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 ஆகும். பேருந்து நிறுத்தம் வாயில் எண் 7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003 என்ற முகவரியிலோ அல்லது 94885-18268, 0422-6611268 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...