உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மோசடி: காவல் நிலையத்தில் புகார்

உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மர்ம நபர்கள் முறைகேடு செய்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் தமிழக அரசால் அங்கீகாரம் பெற்ற 23 ஆவண எழுத்தர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து லோகநாதன், முத்துக்குமார், ஜோதிலட்சுமி, சாத்ராக், சிவசங்கர், மணிவண்ணன், அமுல்ராஜ், அப்பாதுரை, ராஜேந்திரன், ஞானசேகரன் ஆகிய ஆவண எழுத்தர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற அழைப்பாணை வந்துள்ளது.



இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள் விசாரித்தபோது, மேற்கண்ட 11 ஆவண எழுத்தர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் முறைகேடு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. சார்பதிவாளர் சிவக்குமாரை பணியிட மாற்றம் அல்லது துறை மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சார்பதிவாளர் லஞ்சம் அதிகமாக வாங்குவதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாகவும் கூறி புகார் அளித்துள்ளனர்.

ஆவண எழுத்தர்களின் பெயர் மற்றும் அலுவலக முகவரியை மர்ம நபர்கள் பயன்படுத்தி, அலுவலக முத்திரையை போலியாக தயாரித்து தவறாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் மீது முறைகேடாக ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவண எழுத்தர்கள் சார்பில் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...