கோவையில் பருத்தி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. பருத்தி தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' (COTTON - The Sustainable Fibre Of The Future) என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது.



இந்த கருத்தரங்கத்தின் துவக்க விழா ஆகஸ்ட் 9 அன்று மாலை நடைபெற்றது. இந்திய பருத்தி கூட்டமைப்பின் துணைத் தலைவரும் கருத்தரங்கின் சேர்மனுமான நடராஜ் விழாவை துவக்கி வைத்தார்.



இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் விழாவிற்கு தலைமை வகித்தார்.



இந்த விழாவில் KG குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் L.S. மில்ஸ் சேர்மன் மணிவண்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் பேசுகையில், "இந்தியாவிற்கும் பருத்திக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பருத்தி என்பது வணிகத்திற்கானதாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. பருத்தி உற்பத்திக்கு ஏதுவாக நம் நாட்டின் காலநிலை அமைந்துள்ளது. உலகச் சந்தையின் பருத்தி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளது," என்றார்.

மேலும் அவர், "இந்த கருத்தரங்கம், இத்தகைய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் திட்டங்கள் தீட்டி நம் இலக்கை அடைவதற்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்," என்றும் கூறினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு ஆடை உற்பத்தி நிறுவனங்களும் வல்லுனர்களும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...