பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நீர்ப்பாசன கண்காணிப்புக் குழு கூட்டம்

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. நீர் திருட்டை தடுக்க பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு விரைவில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நான்கு சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடை மடைக்கு நீர் செல்வதை முறைப்படுத்துவது மற்றும் நீர் திருட்டை தடுப்பது குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இன்று (09.08.2024) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப., தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் தாலுகா பகுதிகளுக்கும், கடைமடை பகுதியான வெள்ளக்கோவில், குண்டடம் மற்றும் உடுமலை பகுதிக்கு பாசன நீர் முறையாக செல்ல வேண்டியும், நீர் திருட்டை தடுக்கவும் நீர்வளத்துறையினருக்கு சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், தண்ணீர் திருடப்படும் பகுதியில் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கவும், கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடும் காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது. தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...