உக்கடம் புதிய மேம்பாலம் திறப்பு: நிறைவடையாத பணிகளால் போக்குவரத்து நெரிசல்

கோவையில் உக்கடம் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நிறைவடையாத பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.



Coimbatore: கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், மேம்பாலப் பணிகள் சில இடங்களில் இன்னும் நிறைவடையாததால், உக்கடம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கேரளா, பழனி, பொள்ளாச்சி, ராமநாதபுரம், செல்வபுரம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் போன்ற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், கேரளா மற்றும் பொள்ளாச்சி வழியாக வரும் வாகனங்கள் ராமநாதபுரம் செல்ல வழி இல்லாததால், மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் மீண்டும் உக்கடம் பேருந்து நிலையம் முன்பு இறங்க வேண்டியுள்ளது. இதனால், அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பில் குவிவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. முன்பு மேம்பாலம் இல்லாதபோது 30 நிமிடங்களில் கடக்கும் பாதையை, தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திறப்பு விழாவின் போது, புதிய மேம்பாலத்தால் ஏழு நிமிடங்களில் சாலையைக் கடந்துவிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமை வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...