முதலீடுகளை ஈர்க்க மொரீஷியஸ் முயற்சி: கோவை தொழில்முனைவோர் குழு விரைவில் பயணம்

மொரீஷியஸ் நாட்டில் முதலீடு செய்தால் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கோவை தொழில்முனைவோரிடம் உறுதியளித்துள்ளனர். விரைவில் கோவை தொழில்முனைவோர் குழு மொரீஷியஸ் செல்ல முடிவு செய்துள்ளது.


கோவை: கோவை தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மொரீஷியஸ் நாட்டில் தொழில் தொடங்கினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து, கோவை தொழில்முனைவோர் குழு விரைவில் மொரீஷியஸ் செல்ல முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கரோனா தொற்று, ஜிஎஸ்டி அறிமுகம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, பல்வேறு வரி உயர்வுகள் காரணமாக எம்எஸ்எம்இ தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டு அதிகாரிகள் கோவை தொழில்துறையினருடன் கலந்துரையாடினர். அவர்கள் தங்கள் நாட்டில் முதலீடு செய்தால் பல்வேறு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும், கோவை தொழில்துறையினரை மொரீஷியஸ் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

மொரீஷியஸ் நாட்டு நிதித்துறை அதிகாரி சோமில்துத் போலாஹ் பேசுகையில், "மொரீஷியஸ் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. வர்த்தகத்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்தால் சிறப்பான வளர்ச்சி பெறலாம்," என்றார்.

நிதித்துறை அதிகாரி செட்நாராயணன்சிங் கூறுகையில், "இருநாடுகளுடன் இணைந்து வணிக திட்டங்களில் முதலீடு செய்வதால் வரிச்சலுகை, மானியம் உள்ளிட்ட பல பயன்களைப் பெறலாம். கோவை தொழில்துறையினர் மொரீஷியஸ் வருவதால் முதலீட்டு வாய்ப்புகளையும் களநிலவரத்தையும் தெரிந்துகொள்ள முடியும்," என்றார்.

திட்ட இயக்குநர் தோவினாஷி, "மொரீஷியஸில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவுகளில் முதலீடு செய்யும் தொழில்முனைவோருக்கான வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன," எனத் தெரிவித்தார்.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் கண்காட்சி தலைவர் பொன்ராம் ஆகியோர், மொரீஷியஸ் அதிகாரிகளின் அழைப்பை ஏற்று விரைவில் கோவையிலிருந்து தொழில்முனைவோர் குழு மொரீஷியஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...