கோவையில் கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோவை வேடப்பட்டியில் கண்ணாடி விரியன் பாம்பு கண்டுபிடிப்பு. இனப்பெருக்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட குட்டிகள் பிறக்கின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாம்பு பிடி நிபுணர் அறிவுறுத்தல்.



Coimbatore: கோவை வேடப்பட்டி பகுதியில் ஒரு வீட்டு வாசல் அருகே கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தன்னார்வ அமைப்பான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு உறுப்பினரும், பாம்பு பிடி வீரருமான விக்னேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விக்னேஷ் அந்த இடத்திற்கு சென்று, பாம்பை பாதுகாப்பான முறையில் மீட்டு, வனத்துறை அறிவுறுத்தலின்படி அதன் வாழ்விடத்தில் விட்டார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் கூறுகையில், "கண்ணாடி விரியன் பாம்புகள் மிகவும் விஷமுள்ளவை. இந்தியாவில் பாம்பு கடி மரணங்களில் பெரும்பாலானவை கண்ணாடி விரியன் பாம்புகளால் ஏற்படுகின்றன," என்றார்.



மேலும் அவர், "தற்போது கண்ணாடி விரியன் பாம்புகளின் இனப்பெருக்க காலம். ஒவ்வொரு பெண் பாம்பும் 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈனுகின்றன. இந்த குட்டிகள் பல்வேறு இடங்களில் உலா வருகின்றன. பார்ப்பதற்கு மலைப் பாம்பு போல் இருப்பதால், இது விஷமற்றது என நினைத்து யாரும் பிடிக்க முயலக் கூடாது," என எச்சரித்தார்.

"பாம்புகளைக் கண்டால் அடித்துக் கொல்லக்கூடாது. உடனடியாக வனத்துறைக்கு அல்லது பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு, அதன் வாழ்விடத்தில் விடுவார்கள்," என்று விக்னேஷ் அறிவுறுத்தினார்.

சமீபத்தில் கோவையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் முரளி உயிரிழந்த சம்பவமும், ஒரு சிறுவன் பாம்பு கடியால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...