உலக உறுப்பு தான தினம்: 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் 'Gift an Organ' கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு "Gift an Organ" கையெழுத்து இயக்கத்தை துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி கொண்டாடப்படும் உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு உறுப்பு தான தினமான இன்று (ஆகஸ்ட் 13) 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் துவங்கப்பட்டுள்ள "Gift an Organ" என்ற கையெழுத்து இயக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் மருத்துவ பிரிவைச் சேர்ந்த Dr. சுப்புராஜா கூறுகையில், "ஆண்டுதோறும் இந்தியாவில், ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் உடல் உறுப்பு இல்லாமல் உயிரிழந்து வருகிறார்கள். மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் பட்சத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளை வைத்து 15 நபர்கள் வரை பாதுகாக்க முடியும்" என்றார்.

'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் சேர்மன் விஷ்ணு பிரபாகர் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளாக இந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறோம். இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணியை துவங்கி உள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் இந்த மாதம் முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்" என்றார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...