உதகை குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளிக்கு சி.ஐ.எஸ் சர்வதேச அங்கிகாரம்


நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் முதலிடம் வகிக்கும் குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.



குறிப்பாக துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் ஆண்டு தோறும் இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

மேலும், இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே உதகை குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது. பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சுடும் உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் அனைத்து பயிற்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படும் நிலையில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்தியாவில் உள்ள சிறந்த சர்வேதேச பள்ளிகளில் குட்செப்பர்டு சர்வதேச பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் முதல் சர்வதேச பள்ளியாக (கவுன்சில் ஆப்இன்டர் நேசனல் பள்ளி) சி.ஐ.எஸ் சர்வதேச சான்றிதழ் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய புதுமையான கல்வி முறையை இப்பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக பயில இவ்விருது வழி வகை செய்யும் என குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த சர்வதேச அங்கிகாரம் பெற்றிருப்பதன் மூலம் சுதந்திரமான உலகளாவிய கல்வி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் திறம்பட கல்வி முறைகளை புதுப்பிக்கவும் முடியும்.

உலகத் தரமான கல்வி சர்வதேச திட்டங்களை இப்பள்ளி வழங்கும். 2010 ஆண்டில் இருந்து சி.ஐ.எஸ்-யில் உறுப்பினராக உள்ள குட்செப்ர்டு சர்வதேச பள்ளி இந்த சர்வதேச அங்கிகாரம் பெற மூன்று ஆண்டுகள் ஆனது. பல்வேறு சிறப்பான ஆய்வுகளுக்கு பிறகு சர்வதேச தர அங்கீகாரம் பெற்று குட்செப்பர்டு பள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...