மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை: கோவையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மதிமுக சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.


கோவை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.



அதன் அடிப்படையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட மதிமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மதிமுக மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...