EMRI-GHS நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் EMRI-GHS நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டவிரோத வேலை நேரம், அடிப்படை வசதிகள் இன்மை போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: EMRI-GHS நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் EMRI-GHS நிர்வாகத்தின் பெண் அதிகாரி தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சட்டவிரோத 12 மணி நேர வேலை, வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதியின்மை, வாய்மொழி உத்தரவாத பணியிட மாறுதல், பணி நீக்கம் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக, நிர்வாகத்தின் விசாரணை அதிகாரியாக உள்ள அம்மு, சட்டவிரோதமாக தொழிற்சங்க உறுப்பினர்களை தண்டிப்பதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



EMRI-GHS நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கையை கைவிடுதல், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்தல், விடுமுறை நாட்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்கள் முறையாக இயக்கப்படுதல், தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை அமைத்து தருதல், கோவை மாவட்ட நிர்வாக அதிகாரி விக்னேஷின் நேர்மையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டு முதற்கட்டமாக தென்காசி மற்றும் மதுரை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக இன்று கோவையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...