உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் வாகன பேரணி

உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ஆகியோரின் அறிவுரைப்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



குட்டைதிடல் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி வாகன பேரணியை துவக்கி வைத்தார்.



பேரணி குட்டைதிடலில் துவங்கி, சதாசிவம் வீதி, நெல்லுக்கடை வீதி, பொள்ளாச்சி ரோடு வழியாக சென்றது.



பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



பின்னர் தளி ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக மீண்டும் குட்டைதிடலில் பேரணி நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் பி என் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் ராதிகா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட பிரச்சார அணி செயலாளர் சின்ராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...