கோவை அரசு மருத்துவமனையில் சிசிடிவி பழுது, கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்- ஏபி முருகானந்தம்

கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராக்கள் பழுது மற்றும் கழிப்பிட வசதி இல்லாமை குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் இருப்பிட மருத்துவரிடம் சென்று விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டினார். அந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சிபிஐ விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கோவை அரசு மருத்துவமனையில் 200 சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அவை அனைத்தும் வேலை செய்யவில்லை என்றும் முருகானந்தம் தெரிவித்தார். மேலும், கழிப்பிட வசதி இல்லை என பயிற்சி மருத்துவர்கள் கூறுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இரத்தக்கறை படிந்த துணிகளை எடுக்க கூட ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

சுகாதார அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முருகானந்தம், சிசிடிவி பழுது மற்றும் கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...