கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் இடம்பெற்ற ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் ஆகஸ்ட் 16, 2024 அன்று ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ராக்கிங் இல்லா கல்லூரி வளாகம் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.


கோவை: கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 16, 2024 அன்று நடைபெற்றது. இந்தியாவில் ராகிங் இல்லாத கல்லூரி வளாகங்களை உருவாக்கும் நோக்கில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர். வசந்தகுமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே. முருகையா ஆகியோரின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி கல்லூரியின் இசைக்குழுவின் பிரார்த்தனை பாடலுடன் தொடங்கியது. கற்பகம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சுதா வரவேற்புரை நிகழ்த்தினார்.



கோவை மாவட்ட சிபிசிஐடி துணை ஆய்வாளர் சரவணன் முக்கிய உரையாற்றினார். மாணவர்களிடையே ராகிங் இல்லாத சூழலின் முக்கியத்துவம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் அவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.



கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் நலன் பிரிவு முதல்வர் டாக்டர் பி. தமிழரசி, மாணவர்களிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.



செட்டிபாளையம் காவல் நிலைய துணை ஆய்வாளர் முகமது, செவிலியர் கல்வி மாணவர்களின் தரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.



கற்பகம் கல்வி நிறுவனங்களின் பொதுத்தொடர்பு அதிகாரி அதிபாண்டியன் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றினார். மனநல செவிலியர் துறையின் இணைப் பேராசிரியர் என். இலக்கியா நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கற்பகம் செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பி.எஸ்.சி செவிலியர் படிப்பு மாணவர்கள் பங்கேற்று ராக்கிங் இல்லா கல்லூரி வளாகம் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.



அனைவரும் வரவேற்கப்படும், மதிக்கப்படும் மற்றும் ஆதரிக்கப்படும் ராகிங் இல்லாத கல்லூரி வளாகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...