கொல்கத்தா மருத்துவர் கொலை: கோவை கே.ஜி மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை கே.ஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



கோவை: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் உள்ள கே.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



கோவையில் உள்ள கே.ஜி மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம், "மருத்துவர்கள் கொலை நடப்பது என்பது முட்டாள்கள் கையில் தேசம் இருக்கிறது என்பதை குறிக்கிறது" என்று கூறினார்.

மேலும் அவர், "காவல்துறையும் அரசு நிர்வாகமும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். கஞ்சாவை ஒழிக்க வேண்டும். மதுபானங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...