முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை வழங்கினார்

கோவையில், முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவரிடம் வழங்கினார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தோல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.


Coimbatore: கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் நீதியரசருமான கற்பக விநாயகம் தோல் தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜா சண்முகம் கிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வு, கோவையில் உள்ள கங்கா தோல் தானம் மையம், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் ரோட்டரி 3201 ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் தோல் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார், பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ்குமார், துணைத் தலைவர் செந்தில் குமார், சந்திரசேகர், குமார் தங்கவேல், சிவசக்தி மற்றும் கோல்டு மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம், "தோல் தானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. கண் தானம் போன்ற உறுப்பு தானங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், தோல் தானம் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஒருவர் மறைந்த பின்னும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தோல் தானம் உதவுகிறது," என்று கூறினார்.

மேலும் அவர், "நாம் மறைந்த பின் செய்கின்ற தோல் தானத்தால் நாம் தெய்வமாகிறோம். எனவே பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம்," என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி தோல் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மேலும் பலரை தோல் தானம் செய்ய ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...