கோவையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாட்டம்: சகோதர பாசத்தை வெளிப்படுத்திய வடமாநிலத்தவர்கள்

கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பார் கர்தர்கச் சங்க வழிபாட்டு மையத்தில் வடமாநிலத்தவர்கள் ரக்‌ஷா பந்தன் விழாவை கொண்டாடினர். உலக அமைதிக்காக பாடல்கள் பாடி வழிபட்டு, ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தினர்.


கோவை: கோவை நகரில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் வலிமையை உணர்த்தும் இந்த விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.

வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பார் கர்தர்கச் சங்க வழிபாட்டு மையத்தில் வடமாநிலத்தவர்கள் உலக அமைதிக்காக பாடல்கள் பாடி வழிபட்டனர். உலக அமைதியை முன்னிறுத்தும் விதமாகவும், அமைதியை வலியுறுத்தியும் மேளதாளம் இசைத்து பாடல்கள் பாடி உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.

வழிபாட்டுக்குப் பின்னர் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கும் ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தினர். பதிலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர்.

கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிறுகளை கட்டி சகோதர, சகோதரிகள் அன்பின் வலிமையை வெளிப்படுத்தினர். வடமாநிலத்தவரின் பண்டிகையான இது தற்பொழுது தமிழகத்திலும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...