கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 50 கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களும், ஒரு கொசு மருந்து அடிக்கும் வாகனமும் மேயரால் வழங்கப்பட்டன. இது டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேம்படுத்தும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (20.08.2024) ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் 50 கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களையும், ஒரு கொசு மருந்து அடிக்கும் வாகனத்தையும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய உபகரணங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 50 கையடக்க கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் 5 கொசு மருந்து அடிக்கும் வாகனங்களுடன் சேர்ந்து பயன்படுத்தப்படும்.



இந்த புதிய முயற்சியின் மூலம், ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் கிடைக்கும். கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் AMS பணியாளர்கள் வாரந்தோறும் குடியிருப்புகள், கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அங்காடி பகுதிகள் ஆகியவற்றில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, மண்டல அலுவலர்கள் குணசேகரன், ஆண்டியப்பன், பரமசிவம், இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...