‘டபுள் டக்கர்-ஏசி, வைபை, டி.வி வசதியுடன் "உதய் எக்ஸ்பிரஸ்" ரயில் டெல்லி- லக்னோ தடத்தில் முதலில் இயக்கம்

இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரயிலை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களான டெல்லி- லக்னோ தடத்தில் இந்த ரயில் முதல்கட்டமாக இயக்கப்படும் எனத் தெரிகிறது.

‘உத்கிரிஷ்சித் டபுள் டக்கர் ஏ.சி. யாத்ரி எக்ஸ்பிரஸ்’ என்ற சொல்லின் சுருக்கமே ‘உதய்’ எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கிடையாது. பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம். தானியங்கி உணவு வழங்கும் எந்திரங்கள் மூலம் பயணிகள் உணவுகளையும், காபி, தேநீர், குளிர்பானங்களையும் வாங்கி பருகலாம். 

இது குறித்து ரயில்வேத் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், “ உதய் எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் அதிக மக்கள் பயணிக்கும் வழித்தடமான டெல்லி- லக்னோ தடத்தில் இயக்கப்படும். இதற்குக் கட்டணம் 3 அடுக்கு ஏ.சி. கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.

அதே சமயம், பயணிகளுக்கு அதிகமான, சிறந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், பயணிகளுக்கு எல்.சி.டி. திரை, பயணிகள் கேட்க வைபை ஸ்பீக்கர்கள், வைபை வசதி போன்றவைகள் இருக்கும். படுக்கை வசதிகள் இல்லாத இந்த இரண்டு அடுக்கு ரயிலில் இரவு நேரத்தில் இயக்கப்படும். பயணிகளுக்கு படுக்கை வசதி இல்லாத போதிலும், வசதியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதி, நவீன வடிவமைப்பில் வண்ணமயமான பெட்டிகள், பயோ- கழிப்பறைகள் கொண்டதா இருக்கும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இந்த ரயில் செல்லும்’’ எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...