மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நியமனம் குறித்து வானதி சீனிவாசன் கருத்து

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நியமிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோவை தெற்கு தொகுதி திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நேரடியாக நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மத்திய அரசின் இணைச் செயலாளர்களை இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நேரடியாக நியமிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வானதி சீனிவாசன் கூறுகையில், "ஒன்றிய அரசின் முக்கிய துறைகளில் திறமையானவர்களை நேரடி நியமனம் செய்கிறார்கள். இது நிரந்தர வேலையாக இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நேரடி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை பாதிக்கப்படாது," என்றார்.

மேலும் அவர், "இந்த நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் என 95% பேர் ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள். பாஜக கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர்கள். அரசாங்கத்தையே மக்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்களை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை," என்று தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...