உடுமலை அருகே சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணபதி பாளையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதி பாளையத்தில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது. இந்த செய்தி அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கணபதி பாளையம் கிராமத்தில் பல விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டச்சாலைகளில் வசித்து வருகின்றனர்.



இப்பகுதியில் பிராய்லர் கோழிப் பண்ணைகளும் அமைந்துள்ளன. இந்த பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர்.

சமீபத்தில், ஒரு தனியார் விவசாய பண்ணையில் உள்ள ஆடு, மாடு மற்றும் கோழிகளை அடைக்கும் கொட்டகையில் இருந்து கோழிகள் மர்மமான முறையில் காணாமல் போயின. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவு நேரத்தில் சிறுத்தை போன்ற ஒரு மர்ம விலங்கு கோழிகளை குறிவைத்து பாய்ந்து, அவற்றைக் கவ்விச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இந்த வீடியோ பதிவுகளை வனத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.



இந்த விலங்கு உண்மையில் சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பதை வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற விவசாய பணிகளை மேற்கொள்ளும்போது, இந்த மர்ம விலங்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், அதனைக் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...